சாகாமம் பாலம் போக்குவரத்து தடை: பெரும் சிரமத்தில் விவசாயிகள், சாரதிகள்

Date:

திருக்கோவில் சாகாமம் அலிக்காம்பை பிரதேசங்களை தரை வழியாக இணைக்கும் சாகாமம் பாலம் இன்று அதிகரித்த ஆற்றின் நீர்மட்டம் காரணமாக இராணுவம் மற்றும் பொலிஸாரினால் தடை செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அந்த வழியில் பயணம் செய்பவரான விவசாயிகள் மற்றும் வாகன சாரதிகள் அன்றாட கடமைகளை நிறைவேற்றுவதில் சிரமங்களை சந்தித்துள்ளனர்.

சீரற்ற காலநிலை மற்றும் சேனநாயக்க சமுத்திர வான் கதவின் திறப்பால் வெள்ளம் பரவல் நிலையை மேலும் அதிகரித்துள்ளதோடு, அருகிலுள்ள வேளாண்மைகள் வெள்ளத்தினால் பெரிதும் அழிவடைந்துள்ளன.

சாகாமம் பாலம் ஊடறுக்கும் வெள்ள நீர் போக்குவரத்துக்கு தடைசெய்யும் நிலையை உருவாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ள காலத்தில் இடம் பெற்ற உயிரிழப்பு சம்பவங்கள் தொடரக்கூடாது என்பதில் பாதுகாப்பு படை கவனம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

உணவக உரிமையாளர் சுட்டுககொலை: 2 பேர் கைது!

பெல்லன்விலவில் உணவக உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர்,...

இந்தியா தப்பிச்சென்றவர்களுக்கு வத்தளை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்பு?

சட்டவிரோதமாகப் படகில் தனுஷ்கோடி சென்ற இரு இலங்கையர்களும் அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற...

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ தெலுங்கு படம் அல்ல

தமிழ், தெலுங்​கில் வெற்​றி​பெற்ற ‘லக்கி பாஸ்​கர்’ படத்​துக்​குப் பிறகு, வெங்கி அட்​லூரி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்