ஆவரங்கால் பகுதியில் நேற்று (22) நிகழ்ந்த வாகன விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்தவராக அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த உதயநாதன் விதுஷன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்விபத்தில் உயிரிழந்த அவரது சடலம், உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.




