25.3 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

அனர்த்த உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகை உயர்வு: அரசு அனுமதி

அனர்த்தங்களால் உயிரிழப்புகள் ஏற்படும் சூழல்களில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ. 2,50,000 இலிருந்து ரூ. 1 மில்லியன் வரை அதிகரிக்க அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. இந்த தீர்மானம் பாதுகாப்பு பிரதி அமைச்சரின் தலைமையில் கொழும்பில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது எட்டப்பட்டது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படுவோருக்கு உதவிகளை வழங்க வானிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்கள் 24 மணிநேரமும் செயல்பட தயாராக உள்ளன. இதேவேளை, மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், முப்படையினர், காவல்துறை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட அமைப்புகள் அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்களின் உணவுக்காக தினசரி ஒருவருக்கு ரூ. 1,800 முதல் குடும்ப அளவைப் பொறுத்து நிதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கைகள், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடுதியில் வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு

east tamil

இலங்கைக்கு இந்திய அரசின் நிதி ஒதுக்கீடு

east tamil

போதைப்பொருளை பிடிக்க புதிய தொலைபேசி இலக்கம்

east tamil

கோயிலை புனரமைப்பு செய்தவர் தூண் விழுந்து மரணம்

east tamil

தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி

east tamil

Leave a Comment