27.8 C
Jaffna
February 14, 2025
Pagetamil
கிழக்கு

காரைதீவு நேரு சனசமூக நிலைய வருடாந்த ஒன்றுகூடலும், 75 ஆண்டு பவள விழாவும்

காரைதீவு நேரு சனசமூக நிலையத்தின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் 75ம் ஆண்டு நிறைவு விழாவுக்கான பெயர் பலகை திறப்பு வைபவம், கடந்த நேற்றைய தினம் (18) நிலைய வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

நிலையத் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக குழுவின் முன்னெடுப்பில் நடைபெற்ற இவ் விழாவில், நிலையத்தின் போசகரும், மூத்த இலக்கியவாதி மற்றும் ஊடகவியலாளருமான கலாபூஷண எஸ். நாகராசா உள்ளிட்ட பல்வேறு செயற்பாட்டாளர்கள், நிலையத்தின் வளர்ச்சிக்கு வழங்கிய அர்ப்பணிப்பை ஒப்புக்கொண்டு விசேடமாக கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், உறுப்பினர்களின் பிள்ளைகள் கல்வி சாதனைகளுக்காக பரிசில்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டனர். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 150 புள்ளிகளை பெற்று சாதனை பெற்ற மாணவி தர்மேதா தர்மேந்திராவுக்கு பரிசு மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டுக்களும் வழங்கப்பட்டன.

75 ஆண்டுகள் கடந்த நேரு சனசமூக நிலையம், காரைதீவு மக்களுக்காக தொடர்ச்சியாக ஆற்றிவரும் சமூக சேவைகள், ஆழிப்பேரலை உள்ளிட்ட அனர்த்தங்களின் போது ஆற்றிய அர்ப்பணிப்பு சமூகப் பணிகள் என பல்வேறு சாதனைகளை பேராளர்கள் பாராட்டினர்.

பவள விழாவுக்கான முன்னேற்பாடுகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ள நிலையில், நேரு சனசமூக நிலையம் எதிர்காலத்தில் மேலும் பல சமூகப் பணிகளை நிறைவேற்றும் என நம்பிக்கை வெளியிடப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இராணுவச் சிற்றூண்டிச்சாலையை அகற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முடிவு

east tamil

கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபராக வருண ஜெயசுந்தர பதவியேற்பு

east tamil

பாலத்தை உடைத்து கார் விபத்து – மூவர் காயம்

east tamil

கிழக்கு மாகாணத்தில் 3,500 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – ஆளுநர் அறிவிப்பு

east tamil

மதுபானசாலைக்கு எதிராக இரண்டாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

east tamil

Leave a Comment