சவுதியில் உயிரிழந்த மூதூர் பெண்

Date:

திருகோணமலை மூதூர் கிளிவெட்டி தங்கநகரைச் சேர்ந்த நாகரெட்ணம் வனஜா (42) என்பவர் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க கடந்த ஒன்றரை வருடங்களாக சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், இம்மாதம் (3) திகதி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்ததையடுத்து, அவரது குடும்பம் மிகுந்த துயரத்தில் மூழ்கியுள்ளது. இரு பெண் குழந்தைகளின் தாயான வனஜாவின் உடலை நாட்டுக்கு அனுப்புவதாக அறிவித்தாலும், அதை வீட்டுக்குச் சேர்ப்பது எப்படி என்பது குறித்து குடும்பம் மிகுந்த அதிர்ச்சி மற்றும் குழப்பத்தில் உள்ளது. இதற்கான உதவிகளை குறித்த குடும்பத்தினர் கோரி நிற்கின்றனர்.

குடும்பத்தின் இந்த பரிதாப நிலை, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் புறப்படும் பலரின் நிம்மதியற்ற நிலையை பிரதிபலிப்பதாகவே அமைந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!

கொழும்புப் பகுதியில் குண்டுகளை வெடிக்கச் செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்...

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்