27.6 C
Jaffna
February 12, 2025
Pagetamil
கிழக்கு

வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

இன்றைய தினம் (17.01.2025) வெருகல் பிரதேசத்துக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், பிரதேச செயலாளர் M.A. அனஸ் அவர்களின் தலைமையில் வெருகல் பிரதேச செயலகம் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிரதம அதிதியாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கெளரவ அருண் கேமச்சந்திரா கலந்து கொண்டார். மேலும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ குகதாசன் மற்றும் கெளரவ இம்ரான் மஃரூப் ஆகியோரும் இந் நிகழ்வில் பங்குக்கொண்டிருந்தனர்.

இந்த கூட்டத்தில் துறைசார் திணைக்கள தலைவர்கள், கிராம சேவகர்கள், துறைசார் உத்தியோகஸ்தர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் கிராமமட்ட குழுக்களின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தின் போது, வெருகல் பிரதேசத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள், குறைபாடுகள், மற்றும் அவற்றின் தீர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, பிரச்சனைகளுக்கான தீர்வுகளை விரைவாக வழங்கும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றை செயல்படுத்துவதற்கான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டன.

இந்த கூட்டம் வெருகல் பிரதேசத்தின் மேம்பாடு மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முக்கியமான முறைமையாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சட்டவிரோதமாக வலம்புரி சங்குகள் விற்பனைக்கு முயற்சித்த மூவர் கைது

east tamil

குமாரபுரம் படுகொலைக்கு அனுரவிடம் கோரப்படும் நீதி

east tamil

திருகோணமலையில் விபத்து

east tamil

25 வருடங்களாக இலவசமாக கலை வளர்க்கும் முத்துக்குமார சுவாமி ஆலயம்

east tamil

திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த பொதுக்கூட்டம்

east tamil

Leave a Comment