துமிந்த சில்வா, ஹிரு பற்றிய தகவல்களை வெளியிட தடை

Date:

ஹிரு ஊடக வலையமைப்பு, ஹிரு தொலைக்காட்சி அல்லது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா குறித்து தவறான மற்றும் அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதைத் தடைசெய்து, ‘நியூசென்டர்’ ஊடக நிறுவனத்தின் ஊழியர்கள் குழுவிற்கு கடுவெல நீதவான் நீதிமன்றம் நிபந்தனை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் (தனியார்) வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் கோரிக்கையை ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

ஹிரு ஊடக வலையமைப்பு சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் ஈடுபாட்டின் மூலம் கட்டமைக்கப்பட்டது என்று கூறி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே நியூசென்டரில் வெளியிட்ட அறிக்கையை அடுத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

நியூசென்டர் இயக்குநர் சிரேஷ்ட ஊடகவியலாளர் மஞ்சுள பஸ்நாயக்க உட்பட பல பிரதிவாதிகளின் பெயர்களை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புக்குரிய அறிக்கையை ஒளிபரப்புவதையும், ஹிரு ஊடக வலையமைப்பு குறித்து அவதூறான அல்லது பொய்யான அறிக்கைகளை எதிர்காலத்தில் பரப்புவதையும் தடைசெய்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 24(2) இன் கீழ் இது பிறப்பிக்கப்பட்டதாகவும், ஜனவரி 23 வரை அமலில் இருப்பதாகவும் நீதிபதியின் உத்தரவு கூறியது. நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்க பிரதிவாதிகளுக்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு ஊடக நெட்வொர்க் மற்றொரு ஊடக நெட்வொர்க்கிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்த முதல் நிகழ்வு இதுவாகும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

காலிமுகத்திடல் மின்கம்பத்தில் ஏறி போராடிய இளைஞன்!

"களனி விகாரையில் தியானம் செய்துவிட்ட வந்த போது நான் பொலிசாரால் கைது...

சர்ச்சைப் பிக்கு சிறைக்குள்ளும் சலசலப்பு!

கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள...

உலகம் மிகவும் ஆபத்தானதாக மாறுகிறது: ரஷ்ய ஜனாதிபதி புடின்!

சர்வதேச நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், உலகம் மிகவும் ஆபத்தானதாகி வருவதாகவும் ரஷ்ய ஜனாதிபதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்