உரிமையாளருக்காக 2 மாதங்கள் காத்திருக்கும் நாய்

Date:

தாய்லந்தில் உரிமையாளருக்காக 2 மாதங்களாகக் காத்திருக்கும் ஒரு நாய் இணையவாசிகளின் மனத்தை நெகிழ வைத்துள்ளது.

‘Moo Daeng’ என்ற அந்த நாயை வீடற்ற ஒருவர் வளர்த்து வந்தார்.

உரிமையாளரும், நாயும் நாக்கோன் ரட்சாசிமா மாநிலத்தில் உள்ள 7-Eleven கடை வாசலில் படுத்துக்கொள்வதுண்டு.

உரிமையாளர் நவம்பர் மாதத்தில் இறந்து விட்டார்.

ஆனால் அவர் ஒரு நாள் திரும்பி வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் Moo Daeng எங்கும் செல்லவில்லை.

கடையின் உரிமையாளர் நாயைப் பார்த்துகொள்கிறார். அதற்குப் போர்வையும் அளித்து உணவும் கொடுக்கிறார்.

மற்ற நாய்ப் பிரியர்களும் உணவு அளிக்கின்றனர்.

Moo Daengஇன் கதை அண்மையில் Facebook பக்கத்தில் பகிரப்பட்டது. அந்த கதை இணையவாசிகளின் மனதை நெகிழச் செய்து விட்டது.

எவ்வாறு ஜப்பானில் Hachi என்ற நாய் அதன் உரிமையாளருக்காகத் தொய்வின்றிக் காத்திருந்ததோ அதைப் போன்று Moo Daeng நாயும் காத்திருக்கிறது என்று இணையவாசிகள் கருத்துரைத்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

2.5 மில்லியன் டொலர் இணையத்திருட்டு: பணிநீக்கம் செய்யப்பட்ட நிதியமைச்சின் அதிகாரி சடலமாக மீட்பு!

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணி நீக்கம்...

திருடனிடமிருந்து நகை திருடிய பொலிஸ்காரர் கைது!

வாழைச்சேனையில் வீடு ஒன்றை உடைத்து திருடன் திருடிய 7 இலட்சம் ரூபா...

தனது புண்ணை தோண்டி பெற்ற மகளுக்கு உண்ணக்கொடுத்த தந்தை கைது!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி கோவில் குளத்தில் தந்தை ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்