சாலை விதியை மீறிய பஸ் ஓட்டம் – விபத்தில் 11 பேர் காயம்

Date:

இன்றைய தினம் (16.01.2025) தங்காலை – வீரகெட்டிய வீதியின் 3வது மைல் கல் பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வலஸ்முல்லயிலிருந்து தங்காலை நோக்கி பயணித்த ஒரு பஸ் மற்றொரு பஸ்ஸை முந்திச் செல்ல முயன்றபோதே இந்த விபத்து நிகழ்ந்ததாக விசாரணைகளிலிருந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட பஸ்களின் சாரதிகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி, சட்டவிரோதமாக இடையூறு செய்தல்,...

மண்டைதீவு படுகொலை வழக்கு மீண்டும் செப்டம்பர் 22 வரை ஒத்திவைப்பு

மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்