27.8 C
Jaffna
February 14, 2025
Pagetamil
இந்தியா

குடிபோதையில் மணமகனின் மோசமான செயல்

இந்தியாவில் பெங்களூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் குடிபோதையில் மணமகன் செய்த செயல் இப்போது இணையத்தை உலுக்கி வருகிறது. அனைத்து ஏற்பாடுகளையும் சரியாக செய்து மகளின் வாழ்க்கையில் முக்கிய தருணத்தை கொண்டாட தயாராக இருந்த மணமகளின் தாய், மாமியாராக மாறும் முன்பே அதிர்ச்சி அடைந்தார்!

மணமகன் தனது நண்பர்களுடன் குடித்து போதையில் திருமண மேடைக்கு வந்து ரகளையில் ஈடுபட்டதோடு, விருந்தினர்களிடமும் தகாத முறையில் நடந்து கொண்டார். இதைக் கண்டதும், அதிர்ச்சியடைந்த மணமகளின் தாய் “இந்த திருமணமே வேண்டாம்” என அறிவித்ததுடன், கையெடுத்து கும்பிட்டு, விருந்தினர்களிடமும் “அனைவரும் வீட்டுக்கு செல்லுங்கள்” என கேட்டுக்கொண்டார்.

மேலும், குறித்த மணமகன் ஆரத்தி தட்டை தூக்கி வீசியது, வருங்காலத்தில் மகளின் வாழ்க்கை பாதிக்கப்படும் என கவலைப்பட்ட தாயின் முடிவை துரிதப்படுத்தியது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, மணமகளின் தாயின் முடிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பள்ளி மாணவிக்கு விவாகம் – 5 பேர் மீது வழக்கு பதிவு

east tamil

“வாடகை மனைவி” முறை உள்ள ஊர்

east tamil

ம.பி.யில் நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது பெண் மாரடைப்பால் உயிரிழப்பு

Pagetamil

உலகமே ஏற்றுக்கொண்டாலும் பெரியாரை நான் தொடர்ந்து எதிர்ப்பேன்: சீமான் திட்டவட்டம்

Pagetamil

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது: உச்ச நீதிமன்றம் கருத்து

Pagetamil

Leave a Comment