உரிமையாளருக்காக 2 மாதங்கள் காத்திருக்கும் நாய்

Date:

தாய்லந்தில் உரிமையாளருக்காக 2 மாதங்களாகக் காத்திருக்கும் ஒரு நாய் இணையவாசிகளின் மனத்தை நெகிழ வைத்துள்ளது.

‘Moo Daeng’ என்ற அந்த நாயை வீடற்ற ஒருவர் வளர்த்து வந்தார்.

உரிமையாளரும், நாயும் நாக்கோன் ரட்சாசிமா மாநிலத்தில் உள்ள 7-Eleven கடை வாசலில் படுத்துக்கொள்வதுண்டு.

உரிமையாளர் நவம்பர் மாதத்தில் இறந்து விட்டார்.

ஆனால் அவர் ஒரு நாள் திரும்பி வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் Moo Daeng எங்கும் செல்லவில்லை.

கடையின் உரிமையாளர் நாயைப் பார்த்துகொள்கிறார். அதற்குப் போர்வையும் அளித்து உணவும் கொடுக்கிறார்.

மற்ற நாய்ப் பிரியர்களும் உணவு அளிக்கின்றனர்.

Moo Daengஇன் கதை அண்மையில் Facebook பக்கத்தில் பகிரப்பட்டது. அந்த கதை இணையவாசிகளின் மனதை நெகிழச் செய்து விட்டது.

எவ்வாறு ஜப்பானில் Hachi என்ற நாய் அதன் உரிமையாளருக்காகத் தொய்வின்றிக் காத்திருந்ததோ அதைப் போன்று Moo Daeng நாயும் காத்திருக்கிறது என்று இணையவாசிகள் கருத்துரைத்தனர்.

spot_imgspot_img

More like this
Related

வித்தியா கொலை: சுவிஸ் குமார், கூட்டாளிகளின் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு!

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

போதைப்பொருளுடன் சிக்கிய அதிபரின் மனைவியின் பின்னணி

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரின் மனைவி, தேசிய...

நியூயோர்க் விரைவில் கம்யூனிசமாக மாறும்: ட்ரம்ப்

நியூயார்க் மக்கள் இடதுசாரி ஜோஹ்ரான் மம்தானியை அடுத்த மேயராகத் தேர்ந்தெடுத்த பிறகு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்