இன்று மதியத்துக்கு பின்னர் இருந்து திருகோணமலையில் தொடர்ச்சியான அடை மழை பொழிந்து வருவதனால் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வரோதயநகர், அலஸ்தோட்டம் போன்ற பகுதிகளில் வெள்ளநீர் தொங்கி வருவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
திருகோணமலை பிரதேச செயலகத்தின் அனர்த்த முகமைத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



