Pagetamil
இந்தியா

இந்திய இராணுவ வீரர்கள் இறப்பு

குஜராத் மாநிலம் போர்பந்தரில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் சிக்கி கடலோர காவல் படையை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

போர்பந்தரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக ஏ.எல.ஹெச் துருவ் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது. இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர்.

இது குறித்து போர்பந்தர் பொலிஸ் சூப்பிரெண்டு பகிரத்சிங் ஜடோஜா கூறுகையில், இன்று மதியம் 12.10 மணியளவில் போர்பந்தர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கடலோர காவல் படையின் மேம்பட்ட இலகுர ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. வழக்கமான பயிற்சியின் போதே விபத்து ஏற்பட்டது என கூறியுள்ளார்.

தொழில்நுட்ப சிக்கலே விபத்திற்கான காரணம் என முதற்கட்ட விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!