பெண் எம்.பியின் முறைப்பாட்டால் ஒருவர் கைது!

Date:

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவை பகிர்ந்ததற்காக முன்னாள் மில்லனியா பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திர நவமுனி கைது செய்யப்பட்டுள்ளார்.

நவமுனியை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று காலை படகொடவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் கொட்டஹச்சி தொடர்பில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கொட்டஹச்சியின் சார்பில் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ தாக்கல் செய்த முறைப்பாட்டில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் ஒருவர் பெண் எம்பியின் நற்பெயரை குறிவைத்து பொய்யான தகவல்களை பரப்புவதாகவும், அவர் பணத்திற்காக தன்னுடன் ஹோட்டலுக்கு சென்றதாக பொய்யான தகவல்களை பரப்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நகைகள் இல்லாமல் வந்த கொண்ட ரஞ்சி

ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட, பிரபல...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்...

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்