முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் மஜீத் காலமானார்.

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ஏ. எல். அப்துல் மஜீத் (முழக்கம் மஜீத்) அவர்கள் காலமானார்.

நீண்டகாலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில், சாய்ந்தமருதில் அமைந்துள்ள தனது வீட்டில் நேற்று மாலை (19.12.2024 – வியாழக்கிழமை) இவ் உலகை விட்டு நீத்தார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 09.00 மணிக்கு நடைபெறும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அப்துல் மஜீத் அவர்கள், தனது அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அவர், இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமானார்.

அன்னாரின் மறைவுக்கு அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடையிலும் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவரது சமூகப்பணிகள் மற்றும் அரசியல் சேவைகள் நினைவுகூரப்படுகின்றன.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்