27.8 C
Jaffna
February 14, 2025
Pagetamil
கிழக்கு

முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் மஜீத் காலமானார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ஏ. எல். அப்துல் மஜீத் (முழக்கம் மஜீத்) அவர்கள் காலமானார்.

நீண்டகாலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில், சாய்ந்தமருதில் அமைந்துள்ள தனது வீட்டில் நேற்று மாலை (19.12.2024 – வியாழக்கிழமை) இவ் உலகை விட்டு நீத்தார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 09.00 மணிக்கு நடைபெறும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அப்துல் மஜீத் அவர்கள், தனது அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அவர், இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமானார்.

அன்னாரின் மறைவுக்கு அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடையிலும் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவரது சமூகப்பணிகள் மற்றும் அரசியல் சேவைகள் நினைவுகூரப்படுகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இராணுவச் சிற்றூண்டிச்சாலையை அகற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முடிவு

east tamil

கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபராக வருண ஜெயசுந்தர பதவியேற்பு

east tamil

பாலத்தை உடைத்து கார் விபத்து – மூவர் காயம்

east tamil

கிழக்கு மாகாணத்தில் 3,500 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – ஆளுநர் அறிவிப்பு

east tamil

மதுபானசாலைக்கு எதிராக இரண்டாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

east tamil

Leave a Comment