24.6 C
Jaffna
March 7, 2025
Pagetamil
இலங்கை

மருந்துத் தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும்!

குறிப்பிட்ட சில வகை மருந்துகளின் பற்றாக்குறையை அடுத்த சில நாட்களுக்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார்.

உயர்தர மருந்துகளை தொடர்ச்சியாக வழங்குவதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்சுலின், சோடியம் பைகார்பனேட், கார்போபிளாட்டின் மற்றும் இரினோடெகன் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் திறமையின்மை உள்ளது. சில நிறுவனங்களில் சில அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற பிரச்னைகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்,” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தத்தெடுத்த குழந்தை கொலை: தம்பதிக்கு மரணதண்டனை!

Pagetamil

சாணக்கியன் எழுப்பிய பாதுகாப்பு கவலைகள்!

Pagetamil

மேர்வினுக்கு விளக்கமறியல்

Pagetamil

ஆபிரிக்க காய்ச்சல் பரவிய வடக்கின் 5 பன்றிப்பண்ணைகள் மூடல்

Pagetamil

தென்னக்கோன் பற்றி தகவலறிந்தால் சிஐடிக்கு அறிவிக்கவும்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!