நல்லாட்சி அரசாங்கத்தின் போது விவசாய அமைச்சு இயங்குவதற்காக ராஜகிரியவில் கட்டடம் ஒன்று வாடகைக்கு பெறப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கட்டிடத்தை வாடகை அடிப்படையில் பெறுவதற்கு 66 கோடி ரூபா வைப்புத்தொகையை உரிமையாளருக்கு அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும், கட்டிடம் கையளிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியும் வைப்புத்தொகை திரும்ப வழங்கப்படவில்லை எனவும் விவசாய அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்களை கோரியுள்ளதாகவும் அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.




