வியாழேந்திரன் தரப்பு உள்ளிட்ட 7 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் உட்பட 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதில் ஒரு கட்சி 6 சுயேச்சைகுழுக்கள் உட்பட 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், 22 கட்சிகள் 27 சுயேச்சைக்குழுக்கள் உட்பட 49 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், 392 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக மட்டு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜே.ஜே. முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பழைய கச்சேரி மண்டபத்தில் நேற்று (11) வெள்ளிக்கிழமை தேர்தல் வேட்புமனு தொடர்பாக இடம் பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 449,686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 442 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறும்.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை பாரம் எடுக்கப்பட்டது. இதில் 23 கட்சிகள் 33 சுயேச்சைக்குழுக்கள் உட்பட 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவற்றில் 1 கட்சி 6 சுயேச்சைக்குளு உட்பட 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன் 22 கட்சிகள் 27 சுயேச்சைக் குழுக்கள் உட்பட 49 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்தார்.

ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் ச.வியாழேந்திரன் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. ஆவணங்களுடன் சத்தியக்கடதாசியை இணைக்காததால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இதேவேளை கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தலில் மாவட்டத்தில் 5 பிரதிநிதிகளை தேரந்தெடுப்பதற்கு 16 கட்சிகளும் 22 சுயேச்சைக்குழுக்களைச் சேர்ந்த 304 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

குற்றம் செய்யவே கனடா வரும் வெளிநாட்டு கும்பல்: 46 பேர் கைது, 26 லட்சம் டாலர் மோசடி!

கனடாவில் ‘குற்றவியல் சுற்றுலா’ கும்பல் அம்பலம்: 46 பேர் கைது, 164...

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர்...

மக்கள் வங்கிக்கொள்ளை: உதவி மேலாளர், பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது!

சமீபத்தில் ஹொரனவில் உள்ள ஒரு அரசு வங்கியில் இருந்து ரூ. 35...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்