முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலின் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட கார் ஒன்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பயன்படுத்தியதாக சில தினங்களுக்கு முன்னர் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான உண்மைகளை கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக வெளிநாட்டுத் தடையைப் பெற்றுள்ளது.




