மீண்டும் ஈ.பி.டி.பியினால் அவதிக்குள்ளாகும் தீவுப்பகுதி மக்கள்!

Date:

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட சில தினங்களில் யாழ் தீவுப்பகுதியின் பெரும்பாலான வீதிகளில், சந்திகளில் திடுதிடுப்பென்று வெள்ளை நிறத்திலான வர்ணப்பூச்சுக்களால ஈபிடிபி என்று எழுதப்பட்டு வீணை சின்னம் வரையப்பட்டுள்ளன.

இவற்றில் பல வீதிகளின் புனரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில் பாதசாரிகள் கடவை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான தேர்தல் சின்னங்கள் திடீரென்று வெளிப்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகளும், வாகன சாரதிகளும் இடையூறுகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் வேலணை – குறிகாட்டுவான் வீதியில் முதியவர் ஒருவர் பாதசாரி கடவை ( வெள்ளைக்கோடு ) என்று எண்ணியவாறு திடீரென வீதியை கடக்க முற்பட்டபோது அவ்வீதியால் பயணித்த வாகனம் ஒன்று குடைசாய்ந்த அவலம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அப்பகுதியில் பாதசாரிக்கடவை இல்லாத நிலையில் வெள்ளை நிறத்திலான வீணை சின்னத்தை கடவையாக எண்ணி அப்பொதுமகன் எதிர்பாராதவிதமாக கடக்க முற்பட்டதால் வாகன சாரதி செய்வதறியாது வேகமாக வாகனத்தை ஓரங்கட்ட முயன்றபோது வாகனம் குடை சாய்ந்ததோடு சாரதியும் காயங்களுக்குள்ளாகினார்.

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்