ஒற்றுமையாக தேர்தலை எதிர்கொள்ளுங்கள்: பிரதான தமிழ் கட்சிகளுக்கு இந்தியா அறிவுரை!

Date:

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஒரணியாக போட்டியிடுமாறு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் இந்திய தரப்பு அறிவுரை கூறியுள்ளது.

நேற்று (30) கொழும்பில் இந்திய தூதரை சந்தித்த மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், பா.சத்தியலிங்கம் மற்றும் த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு இந்த அறிவுரை கூறப்பட்டுள்ளது.

பிரதான தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று தேர்தலில் போட்டியிட்டு ஆசனங்களை இழக்கும் அபாயமுள்ளதாக இந்திய தூதர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமக்குள் பிரச்சினைகள் இருப்பதாகவும், மீண்டும் ஒற்றுமையாக தேர்தலை சந்திப்பதில் சிக்கல்கள் உள்ளதாகவும், போதிய காலஅவகாசம் இல்லாமலிருப்பதாக கட்சிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரங்கள் இருப்பது தனக்கு தெரியுமென்றும், அதையும் மீறி ஒற்றுமையாக தேர்தலை சந்தித்து, ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதே புத்திசாலித்தனம், அவ்வாறு நடந்தால் மாத்திரமே தமிழ் அரசியலை தக்க வைத்திருப்பீர்கள், சர்வதேச நாடுகளுடன் ஊடாட முடியும் என இந்திய தூதர் அறிவுரை கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தமக்குள் பேச்சு நடத்தி, முடிவொன்றை தெரிவிப்பதாக தமிழ் கடசிகள் குறிப்பிட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ்...

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் திருப்பித்தர ஒப்புக்கொண்டது: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கைப்...

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்