Pagetamil
முக்கியச் செய்திகள்

ஒற்றுமையாக தேர்தலை எதிர்கொள்ளுங்கள்: பிரதான தமிழ் கட்சிகளுக்கு இந்தியா அறிவுரை!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஒரணியாக போட்டியிடுமாறு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் இந்திய தரப்பு அறிவுரை கூறியுள்ளது.

நேற்று (30) கொழும்பில் இந்திய தூதரை சந்தித்த மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், பா.சத்தியலிங்கம் மற்றும் த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு இந்த அறிவுரை கூறப்பட்டுள்ளது.

பிரதான தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று தேர்தலில் போட்டியிட்டு ஆசனங்களை இழக்கும் அபாயமுள்ளதாக இந்திய தூதர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமக்குள் பிரச்சினைகள் இருப்பதாகவும், மீண்டும் ஒற்றுமையாக தேர்தலை சந்திப்பதில் சிக்கல்கள் உள்ளதாகவும், போதிய காலஅவகாசம் இல்லாமலிருப்பதாக கட்சிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரங்கள் இருப்பது தனக்கு தெரியுமென்றும், அதையும் மீறி ஒற்றுமையாக தேர்தலை சந்தித்து, ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதே புத்திசாலித்தனம், அவ்வாறு நடந்தால் மாத்திரமே தமிழ் அரசியலை தக்க வைத்திருப்பீர்கள், சர்வதேச நாடுகளுடன் ஊடாட முடியும் என இந்திய தூதர் அறிவுரை கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தமக்குள் பேச்சு நடத்தி, முடிவொன்றை தெரிவிப்பதாக தமிழ் கடசிகள் குறிப்பிட்டுள்ளன.

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீதி வழங்கப்படவில்லை’: ஏற்றுக்கொண்டார் ரணில்!

Pagetamil

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

Leave a Comment