பசில் இலங்கையை விட்டு பறந்தார்

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று காலை டுபாய் சென்றுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

பசில் ராஜபக்ஷ இன்று காலை எமிரேட்ஸ் விமானத்தில் டுபாய் சென்றுள்ளார்.

பணம் செலுத்தி, விசேட வசதியை பயன்படுத்தி அவர் வெளியேறியுள்ளார்.

பசில் ராஜபக்ச டுபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வார் என்றும், அமெரிக்கா செல்வதற்கு அவர் எப்போதும் இந்த விமானப் பாதையையே பயன்படுத்துவார் என்றும் கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கோட்டாவை ஜனாதிபதி பதவியிலிருந்து நாட்டு மக்கள் விரட்டிய போது, ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சக்களை சட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாத்தார் என்ற விமர்சனமுள்ளது. தற்போது ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்கு முன்னதாக பசில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நாளை சில பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில்

முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நாளை...

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி மறைவு

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது...

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு: லண்டன் கூட்டாளிக்கு பிடிவிறாந்து!

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்