பொதுவேட்பாளர் தரப்புடன் ஆனந்தசங்கரி தரப்பும் இணைந்தது!

Date:

தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் முடிவு சய்துள்ளனர்.

நேற்று முன்தினம் மட்டக்களப்பு, வந்தாறுமூலையிலுள்ள யோகன் பாதரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உள்ளிட்டவர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து, கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர், உப தலைவர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பசீர் காக்கா, யோகன் பாதர் ஆகியோரும் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வது பற்றி ஆராயப்பட்டதாக அருண் தம்பிமுத்து தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...

போதைப்பொருளுடன் சிக்கிய மீன்பிடி படகு

தெற்கு கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, ​​பெருமளவு போதைப்பொருட்களை...

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்!

போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்