மசாஜ் நிலையத்தில் 2 அழகான யுவதிகளை தெரிவு செய்து கடத்திச் சென்று கூட்டு வல்லுறவு: இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Date:

நேற்று (10) யக்கல, பல்லும்மஹர பகுதியில் உள்ள மசாஜ் சென்டருக்குள் புகுந்து சொத்தை கொள்ளையடித்து, அழகான இரண்டு இளம் பெண்களை கடத்திச் சென்று, மீகவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் அடைத்து வைத்த பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய ஏழு பேர் கொண்ட கும்பலின் நான்கு சந்தேக நபர்களை யக்கல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இளம் பெண்களை கடத்த இந்த கும்பல் பயன்படுத்திய காரையும் பொலிசார் பறிமுதல் செய்தனர். இந்த ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் இளம் பெண்களை கொலை மிரட்டல் செய்ய பயன்படுத்திய வாள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்பதுடன் அவர்கள் தெகடன, வெலிவேரிய மற்றும் கடவட பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.

இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுவிற்கு உதவிய ஒரு பெண்ணும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று (09) அதிகாலை 1.00 மணியளவில் ஏழு பேர் கொண்ட கும்பல் இந்த மசாஜ் மையத்திற்குள் நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மசாஜ் சென்டரில் இருந்த யுவதிகளை கொலை மிரட்டல் விடுத்த குழுவினர், தங்க ஆபரணங்கள், கையடக்கத் தொலைபேசிகள், கிரெடிட் கார்டுகள் என சுமார் 4 இலட்சம் ரூபாவை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பின்னர், இந்த ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல், மசாஜ் சென்டரில் இருந்த பெண்களில் இருந்து இரண்டு அழகான இளம் பெண்களை தேர்ந்தெடுத்து, அவர்களை கடத்தி காரில் மேகவத்தை பகுதிக்கு சென்றுள்ளனர்.

அந்த பகுதியில் உள்ள ஒரு வெறிச்சோடிய வீட்டிற்கு இந்த இளம் பெண்களை அழைத்துச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சேர்ந்த ஏழு பேர், இரண்டு இளம் பெண்களையும் அச்சுறுத்தி காலை வரை பலமுறை வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளனர்.

பின்னர் நேற்று காலை இரண்டு யுவதிகளையும் காரில் ஏற்றி தொம்பே பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அந்த வீட்டில் இருந்த ஒரு பெண்ணிடம், அந்த இரண்டு யுவதிகளையும் ஒப்படைத்துவிட்டு  குழுவினர் வெளியேறினர்.

குறித்த பெண் இரு யுவதிகளையும் தனது வீட்டில் பலவந்தமாக தடுத்து வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யுவதிகளிடம் இருந்த கிரெடிட் கார்டுகளை வைத்து அந்த பெண் பல்வேறு பொருட்களை வாங்கியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

நேற்று மதியம் வீடு திரும்பிய கும்பல், இரு யுவதிகளையும் காரில் ஏற்றிக்கொண்டு வெலிவேரிய பிரதேசத்தில் உள்ள பஸ் நிலையம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த இரண்டு யுவதிகளும் நேற்று மாலை யக்கலை பொலிஸில் வந்து இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதன்படி செயற்பட்ட யக்கல பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய யக்கல பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஏழு சந்தேக நபர்களால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட இரண்டு யுவதிகளும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்