இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கரைச்சி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் இருவர் கைது

Date:

கொம்பிலிருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கரைச்சி பிரதேச
சபை வருமான உதவியாளர்கள் இருவர் இன்று(03) கையும் மெய்யுமாக கைது
செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வருமான வரி உத்தியோகத்தர்கள் இருவரும் இலஞ்சம் வாங்குவதாக
ஆணைக்குழுவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கிளிநொச்சிக்கு விஜயம்
மேற்கொண்ட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் குறித்த வருமான வரி
உத்தியோகத்தர்கள் இருவரையும் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் வைத்து
கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு உத்தியோகத்தர்களும் ஆணைக்குழு அதிகாரிகளால்
கொழும்புக்கு கொண்டு செல்லப்படடுள்ளனர்.

மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக கரைச்சி பிரதேச சபையின் செயலாளருடன் தொடர்பு கொண்ட போது கைது செய்யப்பட்டதனை உறுதிப்படுத்திய அவர் மேலதிக தகவல் எதுவும் தனக்கு தெரியாது என பதிலளித்தார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை எல் நினோ காலநிலைக்குள் நுழைந்தது

இலங்கை தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் கீழ்...

TEEN விபத்துகள் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் கவலை

பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிர...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்