நாடளாவியரீதியில் டெங்கு தொற்று அதிகரிப்பு!

Date:

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டின் 33 வது வாரம் வரை 35,118 தொற்றுக்குகள் பதிவாகியுள்ளன. 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 30,575 தொற்றுக்களே பதிவாகியுள்ளன.

இந்த வாரம் மட்டும் 968 சந்தேகத்திற்கிடமான நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தரவு வெளிப்படுத்துகிறது. முந்தைய வாரத்தில் 917 நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.

மேல் மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்ட பிராந்தியமாகும். நாடு முழுவதும் பதிவான தொற்றுக்களில் 51.3% மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளது. மொத்த நோயாளர்களில் கொழும்பு மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் உள்ளனர்.

15 சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசங்களை அதிக ஆபத்துள்ள வலயங்களாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

கண்டி, கம்பஹா , கொழும்பு, இரத்தினபுரி, காலி, களுத்துறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், கொழும்பு தெற்கு, நாவலப்பிட்டி, ஹரிஸ்பத்துவ, கொலன்னாவ, மற்றும் மஹர ஆகிய பகுதிகளே அபாய பிரதேசங்களாகும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் வியத்தகு முறையில் 133% தொற்றுகள் அதிகரித்துள்ளன, அதே வேளையில் கிளிநொச்சி மற்றும் மன்னார் உட்பட வட மாகாணத்தின் பிற பகுதிகளிலும் கடுமையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘கணினிப் பிழை’ காரணமாக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 263 மில்லியன் தவறுதலாக அனுப்பப்பட்டதை இலங்கை வங்கி உறுதி செய்துள்ளது: நாமல்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கொடுப்பனவுகள் இரட்டிப்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை...

பிறந்தநாள் நிகழ்வில் முகத்தில் கேக் பூசிய தகராற்றில் 3 பேர் சுட்டுக்கொலை

உத்தர பிரதேசத்​தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்​தில் கேக் பூசுவது...

7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்த தாக்கம்: ஆம் ஆத்மியில் இருந்து எம்.பி., எம்எல்ஏ.க்கள் விலகும் அபாயம்

ஆம் ஆத்மி கட்​சி​யின் மக்​களவை உறுப்பினர்களுடன் பஞ்​சாபின் ஆளும் கட்சி எம்​எல்​-ஏக்​களும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்