ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து ரணிலை ஆதரிக்கும் பல்டி அணிக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று (16) கொழும்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானங்கள் எட்டப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஜனாதிபதிக்கு ஆதரவான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல்டி அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏறக்குறைய தொண்ணூறு பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் புதிய அரசியல் கூட்டணி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரனவை பொதுச் செயலாளராகக் கொண்ட கூட்டணிக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமை தாங்குவார். இதன் ஆலோசகராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய கூட்டணியின் தேசிய அமைப்பாளர்களாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர அல்லது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த பல்டி அணியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அங்கம் வகிப்பார் என தெரிகிறது.




