பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமான நல்லூர் கந்தன் வீதித்தடைகள்: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவித்தல்!

Date:

நல்லூர் ஆலய சூழலில் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வீதி தடைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளரும், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஆணையாளர் சார்பில் அத்திணைக்களத்தின் விசாரணை அதிகாரியும் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர், இவ்விடயம் தொடர்பில் போலீஸ் தரப்பினரிடமும், நல்லூர் ஆலய நிர்வாகத்திடமும் கலந்துரையாடி பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் மற்றும் ஆபத்துகள் ஏற்படாத வகையில் வீதி தடைகள் அமைக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் யாழ் மாநகர சபை ஆணையாளரின் நடவடிக்கையினை அடுத்து தமத மேலதிக கலந்துரையாடல் இடம்பெறும் என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஹரக் கட்டா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது!

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன்...

காசா போர் நிறுத்தத் திட்டத்திற்கான 15 அம்ச செயல்திட்டத்தை அமைதி வாரியம் வெளியிட்டது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா போர்நிறுத்தத் திட்டத்தின் இறுதிக் கட்டங்களைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்