எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதென, பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் மாவட்டக்குழுவின் பெரும்பான்மையானோர் இணங்கியதாக அநுராதபுரம் மாவட்ட பொதுஜன பெரமுன குழுத் தலைவரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். எம். சந்திரசேன குறிப்பிட்டார்.
அநுராதபுரம் குருந்தன்குளத்திலுள்ள சந்திரசேனவின் இல்லத்தில் இன்று (30) பொதுஜன பெரமுன மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்ற மாவட்டக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
வடமத்திய முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன் உட்பட மாவட்டத்தின் அனைத்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.




