மஹிந்தவுக்கு இடியாக வந்த செய்தி!

Date:

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (25) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தற்போது, ​​பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பான்மையானவர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும், எனவே கட்சியினால் வேறு ஒரு வேட்பாளரை முன்வைத்தால் அது கட்சியின் வாக்காளர் தளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனவும் முன்னாள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே கட்சியில் இருந்து வேறு ஒரு வேட்பாளரை முன்வைக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியுடன் கலந்துரையாடி விரைவில் முடிவெடுப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்