மானிப்பாய், கட்டுடை சந்தியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்தார். அவரது மகள் படுகாயமடைந்தார்.
இன்று (25) மாலை 6.30 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.
மோட்டார் சைக்கிளில் சென்ற தாய், மகள் மீது, வாகனமொன்று மோதியது. இதில் 46 வயதான தாயார் உயிரிழந்தார். அவரது மகள் காயமடைந்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய இரு வாகனங்களும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. வாகனத்தில் பயணித்த சங்கானையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



