பெலியத்தாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியதில் 23 வயதான ரஷ்யப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து இன்று காலை (19) கபலான புகையிரத கடவையல் நிகழ்ந்தது. சம்பவம் நடந்த நேரத்தில் அப்பெண் மின்சார ஸ்கூட்டரில் பயணம் செய்து கொண்டிருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்தபோது புகையிரத கடவையில் சிக்னல் விளக்குகள் இயங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து அஹங்கம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



