சமத்துவம் சமூக நீதியை அடிப்படையாக கொண்டு யாழ்ப்பாணத்திலுள்ள திருநங்கையர், திருநம்பியர்களால் சுயமரியாதை நடைபயணமொன்று யாழில் இன்று சனிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.
யாழ் பேருந்து நிலையம் முன்னாலிருந்து ஆரம்பித்த குறித்த நடைபயணம், முதலில் சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து பண்ணை வீதியூடாக பொலிஸ் நிலைய வீதி, பொது நூலகம் முன்பாக சுயமரியாதை நடை பயணம் நிறைவடைந்தது
சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதியை அடிப்படையாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட சுயமரியாதை நடைபயணத்தில் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு பேரணியாக நடந்து சென்றிருந்தனர்.
இந்த நடைபயணத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வாஸ் உட்பட தூதரக அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




