இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை புதுடில்லி சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி விக்ரமசிங்க தனது விஜயத்தின் போது பல இருதரப்பு சந்திப்புகளிலும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




