போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது!

Date:

போலி நாணயத் தாளுடன் இஸ்லாமியர் ஒருவரை கோப்பாய் பொலிசார் நேற்றைய தினம் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை கொழும்பிலிருந்து தனது குடும்பத்துடன் இஸ்லாமியர் ஒருவர் அரியாலை பகுதிக்கு வருகை தந்து வீடொன்றினை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் திருநெல்வேலி பகுதியில் வெற்று தாள்களையும் போலி இயந்திரத்தினையும் விற்பனை செய்ய முயன்ற பொழுது கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சந்தேகநபரை கைது செய்ததோடு சான்று பொருட்களையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து சந்தேகநபர் தங்கியிருந்த வீட்டிற்கு சோதனையிட முற்பட்ட நிலையில் வீட்டிலிருந்த குடும்பத்தினர் தப்பிசென்றிருந்தமை தெரியவந்தது.

தொடர்ந்து குறித்த நபருக்கு எதிராக யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீதான சமீபத்திய அமெரிக்க தாக்குதலின் பின்னணி இதுதான்!

ஈரானில் அமெரிக்கப் படைகளுக்கும், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள கடல்வழிப் போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலாக...

தூசணம் கதைத்த சிறுவனின் வாயில் சூடு வைத்த தந்தை

மட்டு முறக்கொட்டான்சேனை பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவர் பாடசாலை வகுப்பறையில்...

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்