T20 WC | நியூஸிலாந்தை 84 ரன்களில் வென்றது ஆப்கானிஸ்தான்!

Date:

நடப்பு ரி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் – சி’ ஆட்டத்தில் நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் 84 ரன்களில் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான். அந்த அணியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது.

கயனாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியை இழந்த ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது அந்த அணி.

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இப்ராஹிம் ஸத்ரான் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இப்ராஹிம் ஸத்ரான், 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அஸ்மதுல்லா 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். நபி, ரஷித், குல்புதீன் ஆகியோர் சோபிக்க தவறினர். 56 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து குர்பாஸ் வெளியேறினார். பீல்டிங்கின் போது நியூஸிலாந்து அணி மோசமாக செயல்பட்டது.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து அணி விரட்டியது. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது நியூஸிலாந்து. ஃபின் ஆலன் இன்னிங்ஸின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கான்வே, டேரில் மிட்செல், கப்டன் கேன் வில்லியம்சன், மார்க் சேப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், கிளென் பிலிப்ஸ், சான்ட்னர், லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி ஆகியோர் ஆட்டமிழந்தனர். முறையான பார்ட்னர்ஷிப் அமைக்க அந்த அணி தவறியது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதே காரணம்.

கப்டன் ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஃபசல்ஹக் ஃபரூக்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் 3 விக்கெட்டுகளை பவர்பிளே ஓவர்களில் வீழ்த்தி இருந்தார். முகமது நபி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 15.2 ஓவர்களில் 75 ரன்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது நியூஸிலாந்து. இதன் மூலம் 84 ரன்களில் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான். சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெற்றுள்ள முதல் வெற்றியாக அமைந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மேற்கு இந்தியத் தீவுகள், உகாண்டா, நியூஸிலாந்து, பப்புவா நியூ கினியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ள ‘குரூப் – சி’யில் இரண்டு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது ஆப்கானிஸ்தான்.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை!

மட்டக்களப்பு நகரில் முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தி கொண்டு சென்று சாரதிக்கு மயக்க...

யாழிலிருந்து சென்ற ரயில் மோதி பெண் பலி

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் மோதி பெண் ஒருவர்...

யாழில் பாடசாலை மாணவி ஏழரை மாத கர்ப்பம்: சகோதரன் உள்ளிட்ட இரு இளைஞர்கள் கைது!

யாழில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் ஏழரை மாத கர்ப்பிணியாக அடையாளம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்