32 புகையிரத பயணங்கள் இரத்து!

Date:

நேற்று நள்ளிரவு முதல் இலங்கை புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக 30க்கும் மேற்பட்ட புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று காலை இயக்க திட்டமிடப்பட்ட மொத்தம் 32 சேவைகள் பிற்பகல் 13.00 மணி நிலவரப்படி ரத்து செய்யப்பட்டுள்ளன.

புகையிரத இயந்திர சாரதிகளின் பதவி உயர்வு பிரச்சினை மற்றும் ஆட்சேர்ப்பில் தொடர்ச்சியான தாமதம் காரணமாகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்று பிற்பகல் அளவில் புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்ப முடியும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல்...

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்