ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்று (07) நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிறைவேற்று சபை மற்றும் அரசியல்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் அரசியலமைப்பு திருத்தம் மற்றும் கட்சிக்கு புதிய தலைமை பதவியை நியமிப்பது குறித்த கூட்டம் நடைபெற்றது.



