2012 ஆம் ஆண்டு கிரேக்கப் பத்திரங்களில் முதலீடு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1.84 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உட்பட ஐந்து பிரதிவாதிகளை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பராமரிக்க முடியாது என அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர்.
முதற்கட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சந்தேகநபர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இந்த குற்றப்பத்திரிகையின் செல்லுபடியாகும் தன்மை சட்டத்தின் பார்வையில் சவால் செய்யப்பட்டுள்ளதால், குற்றப்பத்திரிகையை பிரதிவாதிகளிடம் ஒப்படைக்க மறுப்பதாக நீதிபதி குறிப்பிட்டார்.
அதன்படி பிரதிவாதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என உயர்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.




