இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரண மாத்திரைகளை மண்டபம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மண்டபம் அருகே வேதாளை வடக்கு தெரு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சொகுசு கார் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அப்பகுதிக்கு சென்று சொகுசு காரை போலீசார் சோதனையிட்டத்தில் சுமார் பத்து பெட்டிகள் கொண்ட 50 ஆயிரம் வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது தெரியவந்ததை அடுத்து சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.




