26.8 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

பாதாள உலகத்தலைவன் மன்னா ரமேஷ் இன்று இலங்கை அழைத்து வரப்படுகிறார்

டுபாயில் தங்கியிருந்து பல குற்றச்செயல்களுக்கு தலைமை தாங்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனான ‘மன்னா ரமேஷ்’ என அழைக்கப்படும் ரமேஷ் மிஹிரங்க அந்நாட்டில் கைது செய்யப்பட்டு இன்று (7) இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்டர்போல் மூலம் சிவப்பு வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட மன்னா ரமேஷ், உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ரமேஷ் செய்த கொலை, போதைப்பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஆதாரங்களையும் சர்வதேச காவல்துறைக்கு அனுப்ப சில மாதங்களுக்கு முன்பு இலங்கை காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

மன்னா ரமேஷ் தனது அடியாட்கள் மூலம் கப்பம் பெறுவதற்காக இரத்தினபுரி மற்றும் பிற பகுதிகளில் உள்ள கோடீஸ்வர ரத்தின வியாபாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார்.

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த நால்வரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்தமை ரமேஷின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

ரமேஷின் முக்கிய அடியாள் மகேஷ் காவல்துறையுடனான மோதலின் போது கொல்லப்பட்ட பிறகு, நடவடிக்கையில் பங்கேற்ற அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் டுபாயில் இருந்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த காலங்களில் அவிசாவளை பொலிஸ் பரிசோதகர் மற்றும் அவரது பிள்ளைகளுக்கு மன்னா ரமேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இங்கு அழைத்து வரப்படும் மன்னா ரமேஷை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் விசேட குழுவினால் விமான நிலையத்திலிருந்து அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம்

Pagetamil

ஐம்பது மீற்றரில் உள்ள பாடசாலை மைதானத்திற்கு ஒரு கிலோ மீற்றர் நடந்து செல்லும் மாணவர்கள்

Pagetamil

புதையல் தோண்டிய இருவர் கைது

east tamil

பிரதி அமைச்சருக்கு மீனவர்கள் எதிர்ப்பு

Pagetamil

யாழில் அதிக போதையால் இளைஞன் உயிரிழப்பு

east tamil

Leave a Comment