மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் மன்னார், வாங்கலைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) 10 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டது. இந்த நடவடிக்கையில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயணித்த வாகனமும் கைப்பற்றப்பட்டது.
மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் இலங்கை கடற்படை கப்பல் வங்காலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை இடைமறித்துள்ளது.
வாகனத்தை தொடர்ந்து சோதனை செய்ததில், 10 கிலோ 690 கிராம் எடையுள்ள ஐந்து கஞ்சா பொட்டலங்கள் மீட்கப்பட்டன. கஞ்சா பொட்டலங்களுடன், வாகனமும் அதில் இருந்த நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ.4 மில்லியன்.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 முதல் 30 வயதுக்குட்பட்ட மன்னாரில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மற்றும் கேரள கஞ்சா மற்றும் வாகனம் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.




