ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (18) அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
எனவே முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சரவைக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
முதலில் பொதுத்தேர்தல் நடத்தப்படுமா அல்லது ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்த ஊகங்கள் பரவலாக எழுந்துள்ள நிலையில், அமைச்சரவையில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும், எனவே அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.




