25.3 C
Jaffna
February 5, 2025
Pagetamil
இலங்கை

யாழில் பொதுச்சந்தைக்குள் வைத்து பணப்பை திருடிய இளம்பெண்ணும், சகோதரனும் சிக்கினர்… யாழ்ப்பாணத்தை அதிர வைத்த திருடர்களாம்!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தையில் கைப்பை திருடிய இளம்பெண்ணும், சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜேர்மன் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த பெண்ணொருவரின் கைப்பையையே திருடியுள்ளனர்.

மானிப்பாயில் வசிக்கும் 28 வயது பெண்ணம், அவரது சகோதரனான வேலணையில் வசிக்கும் 21 வயது இளைஞனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருநெல்வேலி சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்ய வந்த வெளிநாட்டு பெண்ணின் கடவுச்சீட்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், 500 யூரோ, 20,000 ரூபாய் அடங்கிய கைப்பையே கைக்குழந்தையுடன் வந்த பெண்ணொருவரால் நூதனமான முறையில் அபகரிக்கப்பட்டது.

திருட்டுச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வெளிநாட்டவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

கண்காணிப்பு கமராவின் உதவியுடன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

சந்தேக நபர்களும் திருடப்பட்ட பொருட்களும் மேலதிக நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

கைதானவர்கள் மீது, ஏற்கெனவே பேருந்துகளில் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளன. கைதான இளம்பெண்ணின் கணவன் திருட்டு வழக்கொன்றில் தற்போது விளக்கமறியலில் உள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கேரள கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

சட்டவிரோதமாக வாகனத்தை பதிவு செய்த தொழிலதிபர் ஒருவர் கைது

east tamil

நாமல் ராஜபக்ஷவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

east tamil

35000 பட்டதாரிகளுக்கு உடனடி வேலைவாய்ப்பு

east tamil

விட்டமின் மருந்துகளால் ஒவ்வாமை : 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

Leave a Comment