நாரம்மல துப்பாக்கிச்சூடு பற்றி விசேட புலனாய்வுக்குழு விசாரணை

Date:

நாரம்மலவில் வியாழக்கிழமை இரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் குழுவொன்று நேற்று (19) நாரம்மல பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் இது தொடர்பாக விசாரணை நடத்த குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளது.

உயிரிழந்த சாரதியின் குடும்பத்திற்கு இலங்கை காவல்துறை சார்பில் தேவையான நிவாரணம் வழங்குவது தொடர்பிலும் பொலிஸ் தலைமையகத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாரம்மலவில் வியாழன் (18) மாலை 6.30 மணியளவில் பொலிஸாரின் தேடுதல் மோதலில் முடிவடைந்த நிலையில் ஒருவர் கொல்லப்பட்டார். முதற்கட்ட தகவல்களின்படி, தம்பெலஸ்ஸ பகுதியில் லொறி சாரதி ஒருவர் பொலிஸ் சோதனைச் சாவடியில் நிறுத்தத் தவறியதன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸார் துரத்திச் சென்று லொறியை நிறுத்திய பிறகு, பொலிஸார் ஒருவர் தற்செயலாக துப்பாக்கியால் சுட்டதில் சாரதியின் மரணம் ஏற்பட்டது.

உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும் நாரம்மல பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து நாரம்மல, தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

பரிசோதனைக்காக நிறுத்துமாறு பொலிஸாரின் அறிவுறுத்தல்களுக்கு செவிசாய்க்கத் தவறியதன் காரணமாகவே அவர் சுடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் 59 வயதான நாரம்மல காவற்துறையைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் திணைக்களத்தின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக உள்ளக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சிவில் உடையில் வாகனத்தை சோதனை செய்ய அதிகாரி முயற்சித்ததாகவும், அவர் வாகனத்தை பின்தொடர்ந்து சென்று துப்பாக்கியால் சுட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக எஸ்எஸ்பி தல்துவ தெரிவித்தார்.

சிவில் உடையில் இருந்த எஸ்ஐ துப்பாக்கிச்சூடு நடத்தியதாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிவில் உடையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் லொறியை துரத்திச் சென்றதாக நேரில் பார்த்த ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபர் பொலிஸாரின் முச்சக்கர வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர் தச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ள இளைஞன் என்று சாட்சி கூறினார்.

இந்த சோகமான நிகழ்வைச் சுற்றியுள்ள துல்லியமான சூழ்நிலைகளைத் தீர்மானிக்க இப்போது ஒரு விரிவான விசாரணை நடந்து வருகிறது.

உயிரிழந்த சாரதியின் குடும்பத்திற்கு இலங்கை காவல்துறை சார்பில் நிவாரணம் வழங்குவது தொடர்பிலும் பொலிஸ் தலைமையகத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...

LAUGFS எரிவாயு விலையும் குறைந்தது!

LAUGFS எரிவாயு நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் வீட்டு உபயோக எரிவாயு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்