சில அரச சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி மின்சாரம், எரிபொருள், விமான நிலையம் மற்றும் துறைமுகம் தொடர்பான சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.
உணவு அல்லது பானங்கள் அல்லது நிலக்கரி, எண்ணெய் அல்லது எரிபொருள் அல்லது பிற சேவைகளை இறக்குதல், கையாளுதல், சேமித்தல் மற்றும் விநியோகித்தல், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உட்பட விமான போக்குவரத்து சேவைகளை எளிதாக்குதல் மற்றும் பராமரித்தல் போன்ற துறைமுகத்திற்குள் உள்ள செயல்முறைகள் அத்தியாவசிய சேவைகளாக குறிப்பிடப்படுகின்றன.
ஜனவரி 3 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.




