யாழில் ரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது!

Date:

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் கொண்டுவரப்பட்டு முழுமையாக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (04)உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் வருகைதரும் ஜனாதிபதி மாலை 3 மணி முதல் 5.30 வரை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார்.

இந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த கட்சியின் பொன் மாஸ்டர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குகிறார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை 2026 ல் $8 பில்லியன் கடனைத் திருப்பிச் செலுத்திய கதை: உண்மையா வதந்தியா?

"$8 பில்லியன்" என்ற எண்ணிக்கை எங்கிருந்து வந்தது? இந்த எண்ணிக்கை, இலங்கையின் பல்லாண்டு...

சஹ்ரான்குழு உறுப்பினர் அரச சாட்சியாக நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய தகவல்கள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான சஹாரன் ஹாஷிமுடன்...

ஐ.ம.ச கட்சியின் 5 பிரதேசசபை உறுப்பினர்கள் நீக்கம்

புலத்சிங்கள பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய 5 உறுப்பினர்களை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்