உலகெங்கும் விமரிசையாக கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டம்: யாழ் ஆயரின் வாழ்த்து செய்தி!

Date:

இனவாதம், மதவாதம், போர், இறப்பு, பசி, பட்டினி என நீண்டு கொண்டே செல்லும் காரிருளின் ஆட்சிக்கு பாலக இயேசுவின் பிறப்பு நிச்சயமாக முற்றுப்புள்ளி கொடுக்கும் என்பதை நம்புவோம் என யாழ் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

“காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள் சாவின் நிழல் சூழ்ந்துள்ளோர் மேல் சுடரொளி உதித்தது.”

ஒளி அல்லது பேரொளி என்பது இருளற்ற நிலையாகும். ஓளியற்ற நிலை என்பது பார்வை இழந்த நிலையாகும். பார்வையிழந்த நிலையில் ஒரு மனிதனோ மனித குலமோ பயணம் செய்ய முடியாது. எனவே தான் இறைவன், பாவ இருள் சூழ்ந்த உலகில் வாழும் மனிதருக்கு தன் மகனை ஒளியாக அனுப்பி வைக்கின்றார். பாலக இயேசுவே இந்த ஒளி. அவரின் பிறப்பே எமக்கான விடியல். அமைதியான விடியலை நோக்கி நாம் பயணம் செய்ய பாலக இயேசு என்னும் மாபெரும் ஒளி எம் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டள்ளது.
2025, யூபிலி ஆண்டை நோக்கி பயணம் செய்யும் திரு அவையை, பிறக்கவிருக்கும் 2024ஆம்
ஆண்டை, இறைவேண்டல் ஆண்டாக பின்பற்ற திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார். இன்பத்திலும் துன்பத்திலும் இறைவனைப் புகழ்ந்து கொண்டு, இறைவேண்டலில் எம்மை இணைத்து நம்பிக்கையின் திருப்பயணிகளாய் நாம் நடக்க மாபெரும் ஒளியாகிய பாலக இயேசுவின் அமைதியும் ஆசீரும் மனுக்குலத்திற்கு என்றும் கிடைப்பதாக.

ரஸ்யா, உக்ரைன், இஸ்ரேல், பாலஸ்தீனம் என போர் நடைபெறும் நாடுகளும் இஸ்ரேல், ஈரான், அமெரிக்கா, சீனா, வட கொரியா, தென் கொரியா என போர் முறுகல் நிலையிலுள்ள நாடுகளும் காரிருள் இன்னும் இந்ந உலகை கவ்விக் கொண்டே இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றன.

அன்று இராமாவிலே கேட்ட அழுகுரல்களை விட பல மடங்கு அதிகமான அழுகுரல் இன்று இயேசு பிறந்த தேசத்திலும் எங்கும் கேட்கின்றது. இனவாதம், மதவாதம், போர், இறப்பு, பசி, பட்டினி என நீண்டு கொண்டே செல்லும் காரிருளின் ஆட்சிக்கு பாலக இயேசுவின் பிறப்பு நிச்சயமாக முற்றுப்புள்ளி கொடுக்கும் என நாம் நம்புவோம்.

இந்ந இறைவேண்டல் ஆண்டில் மனந்தளராது நம்பிக்கையோடு செபிப்போம். எனவே இந்ந மகிழ்ச்சியின் நாட்களிலே பாலக இயேசுவின் அமைதியும், ஆசீரும் முழு உலகையும் நிரப்ப ஆசித்து நிற்கின்றேன். பாலகனின் ஆசீர் பிறக்கவிருக்கும் புதிய ஆண்டில் உங்கள் அனைவருக்கும் புத்துணர்ச்சியும் விடியலும் கொடுக்க ஆசித்து வாழ்த்தி நிற்கின்றேன் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்